பாக். சுதந்திர தினம் - புறக்கணித்தார் முஷாரப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் அதிபர் பர்வேஸ் முஷாரப் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானில் இன்று 62வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கராச்சியில் உள்ள முகம்மது அலி ஜின்னா நினைவிடத்தில் பல்ேவறு கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அதிபர் முஷாரப்மட்டும்கலந்து கொள்ளவில்லை.
தன் மீது ஆளுங் கூட்டணி நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதால் நிகழ்ச்சியை அவர் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 பேர் பலி
இந்த நிலையில் நேற்று இரவு லாகூரில் உள்ள காவல்நிலையம் அருகே தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 போலீஸார் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
உடல் முழுக்க வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு கூட்டத்திற்குள் புகுந்த தீவிரவாதி, அதை வெடிக்கச் செய்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications