மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: 6வது சம்பளக் கமிஷனின் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வைப் போலவே தமிழக அரசின் 10 லட்சம் ஊழியர்களுக்கும் விரைவில் ஊதிய உயர்வு அளி்க்கப்படும் என முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார்.

நாட்டின் 61வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதி இன்று காலை 8.30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

அரசு நிறைவேற்றிடும் திட்டப் பணிகளிலும், வளர்ச்சிப் பணிகளிலும் அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பு கணிசமான பங்காற்றுகிறது.

அந்த பங்கின் விகிதத்தை அவர்களுக்கு பகிர்ந்து தருகிறோம் என்ற கொள்கை உடையது இந்த அரசு.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 6வது சம்பளக் கமிஷன் அறிக்கையிபடி மத்திய அரசு நேற்று அறிவித்துள்ள உத்தரவுகளையொட்டி அந்த ஊதிய உயர்வினை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக அரசு அலுவலர்களுக்கும் மனநிறைவு அளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆணைகளை இந்த அரசு விரைவில் வெளியிடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

10 ஆண்டு காலத்திற்கு மேல் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வும், சிறப்பு ஓய்வூதியமும் வழங்கப்படும்.

இதுதவிர, அங்கன்வாடி உதவியாளர்கள், சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கும் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் சம்பளம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

முன்னதாக கோட்டையில் திறந்த ஜீப்பில் ஏறி போலீஸ் அணி வகுப்பை கருணாநிதி பார்வையிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+