ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு-2 பேர் கைது?
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக அம்மாநில போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை ஜெய்ப்பூர் போலீஸார் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
இருவரும் கைது செய்யப்பட்டனரா என்பது குறித்து தகவல் இல்லை. இருவரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும், அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications