ரங்கராஜன்-கிருஷ்ணா எம்.பிக்களாக பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் மற்றும் முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் இன்று ராஜ்யசபா உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், ஆந்திர மாநில ஆளுநரும், பிரதமரின் பொருளாதார விவகார ஆலோசனைக் கவுன்சில் தலைவருமாக இருந்த சி.ரங்கராஜன் சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அதேபோல கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர்கள் இருவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ரங்கராஜனையும் சேர்த்து தற்போது ராஜ்யசபாவில் 3 முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் உள்ளனர். மற்ற இருவர் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிமல் ஜலான்.












Click it and Unblock the Notifications