கள்ள நோட்டைத் தடுக்க பாலிமர் ரூபாய் நோட்டு-அரசு திட்டம்

பாலிமர் கரன்சி குறித்த தொழில்நுட்பத் தகவல்களை அளித்து உதவுமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
பாலிமர் கரன்சிகள் மூலம் கள்ள நோட்டை அடியோடு தடுக்க முடியும். மேலும் ரூபாய் நோட்டுக்கள் கிழியாது என்பதால், கிழிந்த நோட்டு, கசங்கிய நோட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஆஸ்திரேலிய ரூபாய் நோட்டுக்கள் பாலிமரில் ஆனவை. வழக்கமான தாளில் இல்லாமல் பாலிமரில் அவை அச்சிடப்படுகின்றன. அவை மிகவும் பாதுகாப்பானவை. இதன் காரணமாக அங்கு கள்ள நோட்டுக்களே கிடையாது.
ஆஸ்திரேலிய ரூபாய் நோட்டுக்கள் சிறப்பு பாலிமரில் அச்சிடப்படுகின்றன. இது மிகவும் மெலிதாக இருக்கும். ஆனால் கள்ள நோட்டுக்கள் மிகவும் அடர்த்தியாக இருக்கும். இதை வைத்து எளிதில் கள்ள நோட்டுக்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
மேலும், பெரும்பாலான கள்ள நோட்டுக்கள் தாளில்தான் அச்சிடப்படுகின்றன. இவற்றை எளிதில் கிழித்து விடலாம். ஆனால் பாலிமர் நோட்டுக்களை அவ்வளவு சுலபமாக கிழிக்க முடியாது.
இதுதவிர சுற்றுச்சூழலுக்கும் பாலிமர் ரூபாய் நோட்டுக்கள் உகந்தவையாகும். நீண்ட நாட்களுக்கு இவை பாதுகாப்பாக இருக்கும். ஆனால் வழக்கமான தாளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் சீக்கிரம் கிழிந்து விடும். கசங்கியும் விடும்.
சாதாரண தாளினால் ஆன கரன்சியை விட பாலிமர் ரூபாய் நோட்டுக்கள் நான்கு மடங்கு காலம் நீடித்த ஆயுளைக் கொண்டதாகும் என்றார் அவர்.
சமீபத்தில், உ.பி. மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டம் தும்ரியாகஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் கிளை கருவூலத்தில் ரூ.1.25 கோடி கள்ள நோட்டுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இது அரசையும் மக்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கருவூலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் இருந்த வரிசை எண்கள், நிஜ ரூபாய் நோட்டின் வரிசை எண்ணை ஒத்திருந்தது. இது தொடர்பாக ஷெகாவத் அலி என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து பஞ்சாப்-பாகிஸ்தான் எல்லையான கல்ரா செக்டர் பகுதியில் ரூ.10 லட்சம் இந்திய போலி ரூபாய் நோட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் இதுபோல கள்ள நோட்டுக்களின் புழக்கம் மிகப் பெரிய அளவில் உள்ளது. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயும் தீவிரவாத அமைப்புகளும் சேர்ந்து கள்ள நோட்டுகளை இந்தியாவில் புழக்கத்தில் விடுகின்றனர் என்று புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதையடுத்தே கள்ள நோட்டுக்களை ஒழிக்க பாலிமருக்கு மாறுவது குறித்து அரசு யோசித்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications