கள்ள நோட்டைத் தடுக்க பாலிமர் ரூபாய் நோட்டு-அரசு திட்டம்

பாலிமர் கரன்சி குறித்த தொழில்நுட்பத் தகவல்களை அளித்து உதவுமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
பாலிமர் கரன்சிகள் மூலம் கள்ள நோட்டை அடியோடு தடுக்க முடியும். மேலும் ரூபாய் நோட்டுக்கள் கிழியாது என்பதால், கிழிந்த நோட்டு, கசங்கிய நோட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஆஸ்திரேலிய ரூபாய் நோட்டுக்கள் பாலிமரில் ஆனவை. வழக்கமான தாளில் இல்லாமல் பாலிமரில் அவை அச்சிடப்படுகின்றன. அவை மிகவும் பாதுகாப்பானவை. இதன் காரணமாக அங்கு கள்ள நோட்டுக்களே கிடையாது.
ஆஸ்திரேலிய ரூபாய் நோட்டுக்கள் சிறப்பு பாலிமரில் அச்சிடப்படுகின்றன. இது மிகவும் மெலிதாக இருக்கும். ஆனால் கள்ள நோட்டுக்கள் மிகவும் அடர்த்தியாக இருக்கும். இதை வைத்து எளிதில் கள்ள நோட்டுக்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
மேலும், பெரும்பாலான கள்ள நோட்டுக்கள் தாளில்தான் அச்சிடப்படுகின்றன. இவற்றை எளிதில் கிழித்து விடலாம். ஆனால் பாலிமர் நோட்டுக்களை அவ்வளவு சுலபமாக கிழிக்க முடியாது.
இதுதவிர சுற்றுச்சூழலுக்கும் பாலிமர் ரூபாய் நோட்டுக்கள் உகந்தவையாகும். நீண்ட நாட்களுக்கு இவை பாதுகாப்பாக இருக்கும். ஆனால் வழக்கமான தாளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் சீக்கிரம் கிழிந்து விடும். கசங்கியும் விடும்.
சாதாரண தாளினால் ஆன கரன்சியை விட பாலிமர் ரூபாய் நோட்டுக்கள் நான்கு மடங்கு காலம் நீடித்த ஆயுளைக் கொண்டதாகும் என்றார் அவர்.
சமீபத்தில், உ.பி. மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டம் தும்ரியாகஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் கிளை கருவூலத்தில் ரூ.1.25 கோடி கள்ள நோட்டுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இது அரசையும் மக்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கருவூலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் இருந்த வரிசை எண்கள், நிஜ ரூபாய் நோட்டின் வரிசை எண்ணை ஒத்திருந்தது. இது தொடர்பாக ஷெகாவத் அலி என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து பஞ்சாப்-பாகிஸ்தான் எல்லையான கல்ரா செக்டர் பகுதியில் ரூ.10 லட்சம் இந்திய போலி ரூபாய் நோட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் இதுபோல கள்ள நோட்டுக்களின் புழக்கம் மிகப் பெரிய அளவில் உள்ளது. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயும் தீவிரவாத அமைப்புகளும் சேர்ந்து கள்ள நோட்டுகளை இந்தியாவில் புழக்கத்தில் விடுகின்றனர் என்று புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதையடுத்தே கள்ள நோட்டுக்களை ஒழிக்க பாலிமருக்கு மாறுவது குறித்து அரசு யோசித்து வருகிறது.












Click it and Unblock the Notifications