மோனிகா தேவிக்கு ஆதரவாக மணிப்பூரில் பந்த்

Subscribe to Oneindia Tamil

Monica devi
இம்பால்: ஊக்க மருந்து சோதனை என்ற பெயரில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாமல் மோனிகா தேவியை தடுத்ததைக் கண்டித்து மணிப்பூர் மாநிலத்தில் நாளை 24 மணி நேர பந்த் நடத்த மோனிகா தேவிக்கு ஆதரவாக போராடி வரும் போராட்டக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

நாளை காலை 5 மணிக்கு இந்த பந்த் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்வதாக இருந்த ஒரே பளு தூக்கும் வீராங்கனை மோனிகா தேவி மட்டுமே. ஆனால் கடைசி நேரத்தில் ஊக்க மருந்து உட்கொண்டதாக கூறி அவரை தடை செய்து விட்டது இந்திய விளையாட்டு ஆணையகம். இருப்பினும் பின்னர் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்றும் அது கூறியது. இருப்பினும் மோனிகாவால் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.

இதைக் கண்டித்து மோனிகா தேவி சார்ந்த மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மணிப்பூர் மாநில முதல்வர் இபோபி சிங் கோரிக்ைக விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் மோனிகா தேவி விவகாரத்தில் இந்திய விளையாட்டு ஆணையகத்தின் போக்கைக் கண்டித்து நாளை 24 மணி நேர பந்த் நடத்த போராட்டக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே, இன்று இம்பால் வந்த மோனிகா தேவி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். கடுமையாக உழைத்து வெற்றிக்காகவும், சாதனைக்காகவும் காத்திருக்கும் வீரர், வீராங்கனைகள் இதுபோன்ற அழுக்கான அரசியலால் பாதிக்கப்படக் கூடாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+