சென்னையில் விடிய விடிய பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்
சென்னை: சென்னை நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்ததால் நகரமே வெள்ளக்காடானது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வருவதும், மேக மூட்டம் ஏற்படுவதுமாக இருந்தது. சரிவர மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மழை பெய்தது.
இரவு 9 மணிக்கு மேல் ஆரம்பித்த மழை விடாமல் விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் ஓடியது.
இந்த மழை இனறும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் நல்ல மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் வெள்ளக்காடு...
இதேபோல திருச்சியில், நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு பலத்த மழை கொட்டியது. இதில், நகரமே வெள்ளக்காடாக மாறிப் போனது. முக்கிய சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் ஓடியதால் வாகனங்களில் சென்றோர் திணறிப் போயினர்.












Click it and Unblock the Notifications