செங்கோட்டை-ரூ. 2.15 கோடியுடன் சிக்கிய மூவர்

Subscribe to Oneindia Tamil

தென்மலை: ஆரியங்காவு சோதனை சாவடியில் ரூ.2.15 கோடி பணத்துடன் காரில் சென்ற 3 பேரை சுங்க அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

செங்கோட்டையை அடுத்த ஆரியங்காவு அருகே உள்ள சோதனை சாவடியில் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சென்ற காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 6 பெட்டிகளில் கட்டுகட்டாக ரூ.2.15 கோடி பணம் இருந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக காரில் இருந்த மூன்று பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஆம்கோ புராபர்டிஸ் நிறுவனத் தலைவர் சந்திரசேகர், அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் ஜார்ஜ், தஞ்சையை சேர்ந்த அம்பிகாவதி என்பது தெரிய வந்தது.

புனலூர் அருகேயுள்ள இடமண்ணில் 10 ஏக்கர் ரப்பர் தோட்டத்தை வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாகவும், இது ஹவலா பணம் அல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனினும் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸாரும், அமுலாக்க பிரிவு அதிகாரிகளும் அவர்கள் மூவரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+