சிறை நிரப்பும் போராட்டம்-ஜம்முவில் 2 லட்சம் பேர் கைது
ஜம்மு: அமர்நாத் தேவஸ்தானத்திற்குக் கொடுத்த நிலத்தை திரும்பப் பெற்றதை ரத்து செய்யக் கோரி இன்று ஜம்முவில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான பெண்கள் உள்பட 2 லட்சம் பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர்.
ஸ்ரீ அமர்நாத் யாத்திரை சங்கர்ஷ சமிதி சார்பில் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஜம்மு, சம்பா, உதம்பூர், கிஷ்த்வார் மாவட்டங்களில் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும் ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் பெரும் திரளான போராட்டக்காரர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதுவரை ஜம்மு பிராந்தியத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் 3.5 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமர்நாத் சங்கர்ஷ சமிதி கூறியுள்ளது. ஆனால் 2 லட்சம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது என்று சமிதி ஒருங்கிணைப்பாளர் லீலா கரன் சர்மா தெரிவித்துள்ளார். மத்திய அரசு முடிவு கட்டாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் எனவும் அது கூறியுள்ளது.
காஷ்மீரில் எம்.கே.நாராயணன்:
இந் நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவருடன் மத்திய உளவுப் பிரிவின் இயக்குனர் பி.சி.ஹல்தார் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை, கலவரம் தொடர்பான சம்பவங்கள் குறித்து ஆளுநர் என்.என்.ஹோரா, உயர் போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதகளை சந்தித்து கேட்டறிகிறார்.
பின்னர் டெல்லி திரும்பும் நாராயணன் விரிவான அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்பிக்க உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications