கிருஷ்ண ஜெயந்தி: கோவில்களுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
டெல்லி: கிருஷ்ண ஜெயந்தி அன்று தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் டெல்லி கோவில்களுக்கு தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வரும் 24ம் தேதி ஜென்மாஷ்டமி எனும் கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்தநாள் அன்று கோலாகலமாக கொண்டாடப்படும்.
இந் நிலையில் பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து, கிருஷ்ண ஜெயந்தி அன்றும் தாக்குதல் நடத்தப்படும் என்று டெல்லி அரசுக்கு காஷ்மீர் தீவிரவாதிகள் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இந்தக் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த கடிதத்தை உள்துறைக்கு அனுப்பியுள்ளோம் என்று டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் துறை மக்கள் தொடர்பு அதிகாரி ராஜன் பகத் கூறுகையில். பண்டிகையை முன்னிட்டு கோவில்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் டிடக்டர், சிசிடிவி மூலம் கோவில்கள் கண்காணிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
இதற்கிடையில் ஜென்மாஷ்டமியை ஒட்டி அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தும்படி பிரபல பிர்லா மந்திர் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், குருத்வார் மற்றும் மசூதிகளுக்கு டெல்லி துணைநிலை ஆளுனர் ராஜேந்தர் கண்ணா உத்தரவிட்டுள்ளார்.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
ஒட்டன்சத்திரம் தளையூத்து அருவிக்கு வந்த 11 நண்பர்கள்! நீரில் மூழ்கி 4 பேர் பலியான சோகம்! -
Goat: எல்லைத் தாண்டிய ஆடு! கொலையில் முடிந்த வாய்த் தகராறு! ஒரே குடும்பத்தினர் 12 பேருக்கு ஆயுள் தண்டனை! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications