பெரம்பலூர்: ஆட்டோ கவிழ்ந்து 22 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஆட்டோ ஒன்று கார் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்ததில் 22 பேர் படுகாயமடைந்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. சிறுகலப்பூர் என்ற இடத்திலிருந்து கல்யாண கோஷ்டி ஒன்று வந்து கொண்டிருந்தது. கல்பாடி அருகே வந்தபோது எதிரே வந்த காருடன் ஆட்டோ மோதியது.
இதில் அப்படியே தலைகுப்புற கவிழ்ந்தது ஆட்டோ. இந்த விபத்தில் உள்ளே இருந்த 22 பேரும் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்த 15 பேர் திருச்சிக்கு அனுப்பப்பட்டனர்.












Click it and Unblock the Notifications