டிசம்பர் முதல் சென்னை-திருச்சி மின்சார ரயில்
சென்னை: சென்னை எழும்பூர்-திருச்சி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் டிசம்பர் மாதத்திலிருந்து மின்சாரத்தில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் வேலு தெரிவித்தார்.
தெற்கு ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேம்பாட்டு பணிகள், மேலும் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பிறகு ரயில்வே இணையமைச்சர் வேலு கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள மீட்டர் கேஜ் பாதைகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அகல ரயில் பாதையாக மாற்றப்படும். இந்த ஆண்டு 720 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கப்படும். ரூ.822 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விழுப்புரம்-திண்டுக்கல் இடையே 223 கி.மீ. தூரம் இரண்டாவது புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டிலேயே இப்பணி தொடங்கப்படும். விழுப்புரம்-அரியலூர் இடையே ரயில் பாதையில் மின்மயமாக்கும் பணி முடிவடைந்துள்ளது. அரியலூர்-திருச்சி இடையே பணி நடந்து வருகிறது. இப்பணி முடிக்கப்பட்டு, டிசம்பர் மாதத்திலிருந்து சென்னை எழும்பூர்-திருச்சி இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் மின்சாரத்தில் இயக்கப்படும்.
வரும் ஆண்டு திருச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில் இடையே மின்மயமாக்கப்பட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. திண்டுகல்-கரூர்-சேலம், விழுப்புரம்-வேலூர், கோவை-மேட்டுப்பாளையம் இடையிலும் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மூலம் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்த ஒரு வாரத்தில் இப்பாதையில் ரயில் போக்குவரத்து துவங்கப்படும்.
திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே மூன்று ஜோடி பாசஞ்சர் ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்படும். திருநெல்வேலி வழியாக சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்ய ஏதுவாக இந்த பாசஞ்சர் ரயில்களின் நேரம் அமைக்கப்படும்.
திண்டுக்கல்-மதுரை இடையே இரண்டாவது பாதை, திருவாரூர்-நாகூர் அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வுக்கு காத்திருக்கிறது.
திருவாரூர்-பட்டுக்கோட்டை- பேராவூரணி- காரைக்குடி இடையே 148 கி.மீ. மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக பணி துவங்கப்படும் என்றார்.
-
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல்












Click it and Unblock the Notifications