கிருஷ்ண ஜெயந்தி- ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: தீயவை அகன்று, நன்மை செழித்து ஆனந்தம் பொங்கட்டும் என்று கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோகுலத்து கோமகனாம் கண்ணன் அவதரித்த நன்னாளான கிருஷ்ண ஜெயந்தி திருநாளை ஆர்வத்தோடும் மகிழ்வோடும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனம், மொழி, மதம் மற்றும் சாதியற்ற பாதையின் மூலம் பாமர மக்களுக்கு வாழ்க்கை முறையை வகுத்து கொடுத்து, துன்பத்தில் இன்பம் காண வைக்கும் ஞானரசமாம் பகவத் கீதையை இந்த உலகத்திற்கு உபதேசித்தவர் பகவான் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் அவதரித்த இந்த நன்னாளில், மண்ணைத் தின்ற வாயில் விண்ணை காண்பித்த கண்ணனின் திருவருளால் தீயவை அகன்று நன்மை செழித்து அனைவரும் ஆனந்த வாழ்வு வாழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications