அடித்து கொண்ட பெண்களில் ஒருவர் சாவு

Subscribe to Oneindia Tamil

நாசரேத்: இடத் தகராறு காரணமாக பெண்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள மேல வெள்ளமடத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. இவரது தம்பி ராஜேந்திரனுக்கு சொந்தமான காலியிடம் இவரது வீட்டிற்கும், சேர்மதங்கம் என்பவரது இடத்திற்கும் மத்தியில் உள்ளது. இதனால் பாப்பாத்திக்கும், சேர்மதங்கத்தின் மனைவி ராமுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் பாப்பாத்தி அந்த காலியிடத்தில் வேலி போட்டார். இதனை ராமு தட்டிக் கேட்டார்.
இதனால் அவர்களுக்குள் நேற்று மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த பாப்பாத்தி, ராமுவின் தலையில் கம்பால் பலமாக தாக்கினார். இதில் காயமடைந்த ராமு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாசரேத் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாப்பாத்தி மற்றும் அவரது தம்பி ராஜேந்திரன், அவரது மனைவி வசந்தகுமாரி, ஆகியோரிடம் விசாரித்து வருகிறார். ராஜேந்திரன் ஆழ்வார்திருநகரி கூட்டுறவு வங்கியில் காசாளராக உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+