பொங்கலூர் பழனிச்சாமி ஆதரவாளர்கள் மீது நில மோசடி புகார்
கோவை: நில மோசடி செய்ததாக, சிறு தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மீது புகார் கொடுத்துள்ளார் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒருவர்.
தமிழக சிறு தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் சிலர் மீது நில மோசடி புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாட்சியை அடுத்த அரிக்கடவு ராமசந்திரபுரத்தைச் சேர்ந்த மோகன் ராஜ் என்பவர் இந்த புகாரை எழுப்பியுள்ளார்.
அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் ஆதரவாளர்களான கிரி, ராஜூ ஆகியோர் இரண்டரை ஏக்கர் நிலத்தை பணம் தராமல் பறித்துக் கொண்டதாக போலீஸில் அவர் புகார் செய்துள்ளார். இதுகுறித்து மோகன் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது
அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் ஆதரவாளர்களான கிரி, ராஜூ ஆகியோர் எனது இரண்டரை ஏக்கர் நிலத்தை பணம் தராமல் பறித்துக் கொண்டனர். இதுகுறித்து போலீஸில் புகார் செய்தேன். ஆனால், அமைச்சரின் ஆதரவாளர்கள் தரும் பணத்தை வாங்கி கொண்டு போகும்படி போலீஸ் அதிகாரிகள் மிரட்டுகின்றர். இது குறித்து முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், கவர்னர் பர்னாலா, காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளேன் என்று கூறினார்.
முன்னாள் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீது ஆள் கடத்தல், மற்றும் நில பறிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications