ரஜினிக்கு ஒத்துழைப்பு இல்லை: மதுரை தியேட்டர் உரிமையாளர்கள்
குசேலன் படப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க மதுரையில், மதுரை, திண்டுக்கல் மாவட்ட தியேட்டர் உரிமையாளர்களின் அவசரக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் குசேலன் பட நஷ்டம் குறித்து முக்கிய விவாதம் நடந்தது. அதன் பின்னர் மதுரை மாநகர திரைப்பட உரிமையாளர்கள் சங்க செயலாளர்கள் குமரேசன், கஜேந்திரன், ராஜா பாரூக், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ஆகஸ்ட் 1ம் தேதி மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 21 தியேட்டர்களில் குசேலன் திரையிடப்பட்டது. சாய்மீரா பட நிறுவனம், சிவாஜி படத்தை விட நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர். இதனால், சிவாஜி படத்திற்குக் கொடுத்த விலையை குசேலனுக்கும் கொடுத்தோம்.
ஆனால் படம் அப்படி இல்லை, வசூலும் இல்லை. 50 சதவீதம் கூட வசூலாகவில்ைல என்று சாய்மீரா நிறுவனத்திடம் முறையிட்டோம். அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளை எழுதித் தரும்படி கேட்டார்கள்.
ரஜினிகாந்த் குசேலன் படத்தில் தனது பங்கு 25 சதவீதம் கூட இல்ைல என்று கூறி விட்டார். வழக்கமாக ரஜினி படங்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆடம்பரத்தை, குசேலன் படத்திற்கு சற்று குறைத்துக் கொள்ளும்படி படம் வருவதற்கு முதல் நாள் அகில இந்திய ரஜினிகாந்த் மன்ற பொறுப்பாளர் சத்தியநாராயணா கூறினார்.
படம் சரியாக ஓடவில்ைல என்று சென்னையில் உள்ள சாய்மீரா நிறுவனம், ரஜினிகாந்த், கவிதாலயா நிறுவனம், இயக்குநர் வாசு ஆகியோருக்கு கடிதம் எழுதினோம்.
ரஜினிக்கு அனுப்பிய கடிதம் ரிட்டர்ன்
இதில் ரஜினிக்கு அனுப்பிய கடிதம் எங்களிடமே திரும்பி வந்து விட்டது. இந்தச் சூழ்நிலையில், ரஜினிகாந்த் கவிதாலயா நிறுவனத்திற்கு ரூ 10 கோடிைய கொடுத்து விட்டதாக ஒரு இணையதளத்திலும், 100 மில்லியன் டாலர் கொடுத்து விட்டதாக இன்னொரு இணையதளத்திலும் செய்திகள் வெளியாகியுள்ளன
ஆனால் சாய்மீரா நிறுவனத்திடம் கேட்டால், இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்கிறார்கள். பிரச்சினையில் ரஜினிகாந்த் தலையிட்டு தீர்வு காண வேண்டும். கொடுத்துள்ள பணத்திற்கு படம் ஓடி முடியும் வரையிலான வசூலை வைத்து சதவீத அடிப்படையில், பணத்தை திருப்பித் தர வேண்டும்.
இல்லையென்றால், இனி வரும் காலத்தில் கவிதாலயா, ரஜினிகாந்த், விநியோகஸ்தர் ஐங்கரன் நிறுவனம், தயாரிப்பாளர் விஜயக்குமார் ஆகியோரின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்.
ஐங்கரன் ரோபோ படத்தை எடுக்கவுள்ளது. திருவண்ணாமலை என்ற படத்தையும் எடுத்து வருகின்றனர். இவற்றுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை சென்னையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது குசேலன் பட நஷ்டம் தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர் உரிமையாளரக்ள் கூடி முக்கிய முடிவு எடுக்கவுள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே













Click it and Unblock the Notifications