குண்டுவெடிப்பு-5 மருத்துவ மாணவர்களிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர், அகமதாபாத்தில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் தொடர்பாக 5 மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் ஆஜ்மீரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்களுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பில்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக அகில இந்திய மருத்துவக் கழகத்தில் (AIIMS) பயிற்சி பெற்ற ஒரு மருத்துவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியது நினைவுகூறத்தக்கது. அவருக்கும் இந்த குண்டு வெடிப்புகளில் தொடர்பில்லை எனத் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications