For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

13 அமைச்சர்கள்: ரூ.41.000 கோடி திட்டங்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 13 மத்திய அமைச்சர்கள் காரணமாக திமிழகத்திற்கு ரூ.41 ஆயிரம் கோடி திட்டங்கள் கிடைத்துள்ளன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றபோது எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்திற்கு அதிக அளவிலான அமைச்சர்கள் கிடைத்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், மணிசங்கர அய்யர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும், திமுகவுக்கு டி.ஆர்.பாலு, ராஜா, வெங்கடபதி, ரகுபதி, பழனிமாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன், ராதிகா செல்வி ஆகியோரும், பாமகவுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ், வேலு ஆகியோரும் அமைச்சர்களாக கிடைத்தனர்.

13 மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்குக் கிடைத்தது இதுவே முதல் முறையாகும். இத்தனை பேர் இருந்தும் தமிழகத்திற்கு என்ன லாபம் என அவ்வப்போது விமர்சனம் எழுந்து வருகிறது.

ஆனால் 13 பேரால் தமிழகத்திற்கு ரூ. 41,000 கோடி திட்டங்கள் கிடைத்துள்ளது. மொத்தமாக 62 திட்டப் பணிகள் நமக்குக் கிடைத்துள்ளன. இதில் 33 திட்டங்கள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலுவின் மூலமாக வந்துள்ளன.

இதுவரை இந்த அளவுக்கு தமிழகத்திற்கு திட்டங்கள் கிடைத்ததில்லை என்பது தான் இதில் விசேஷம். கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாட்டிலேயே இந்த அளவுக்கு திட்டங்களைப் பெற்றிருப்பது தமிழகம் மட்டுமே.

திட்டப் பணிகளைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவுக்காத்தான் அதிகமாக 76 திட்டங்கள் கிடைத்துள்ளன. ஆனால் நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துத்து அடுத்த இடத்தில்தான் அந்த மாநிலம் உள்ளது.

அதே போல பீகார் மாநிலம் 51 திட்டப் பணிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இதற்கு லாலு பிரசாத் முக்கிய காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X