'கஞ்சா ராணி' கிருஷ்ணவேணி கைது!

சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை படு பிரபலம். இங்கு கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸார் எவ்வளவோ முயன்றும் இதுவரை முடியவில்லை. இதுவரை இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை போலீஸாரால் அடக்க முடியவில்லை.
இப்பகுதியைச் சேர்ந்தவர்தான் கிருஷ்ணவேணி. கடந்த 40 ஆண்டுகளாக கஞ்சா விற்பனையில் கொடி கட்டிப் பறந்து வருகிறார் கிருஷ்ணவேணி. சிறுமியாக இருந்தபோதே கஞ்சா விற்பனையில் இறங்கி விட்டார் கிருஷ்ணவேணி.
பலமுறை குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி சிறைக்கு சென்று வெளியே வந்தவர் வேணி. இவர் மீது டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.
உள்ளே போவதும், வெளியே வரும் கஞ்சா விற்பனையில் இறங்குவதுமாக இருக்கிறது கிருஷ்ணவேணியின் வாழ்க்கை.
சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்த கிருஷ்ணவேணி வந்ததும் வராததுமாக மீண்டும் கஞ்சா விற்பனையில் இறங்கி விட்டார். இதையறிந்த போலீஸார் அவரை ஷெனாய் நகர் பகுதியில் வைத்துக் கைது செய்தனர். உடனடியாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications