10வது நாள்: தொடர்கிறது விசைத்தறிகள் ஸ்டிரைக்
கோவை: கோவை மாவட்டத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. மேலும் பல்லடத்தில் கஞ்சித் தொட்டித் திறந்து மக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறனர்.
பெட்ரோல், டீசல் விலையேற்றம், உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் வெட்டு ஆகிய காரணங்களால் விசைத்தறிச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட கூலி உயர்வு தற்போது போதுமானதாக இல்லை எனவே நூறு சதவீதம் கூலியை உயர்த்தி தர வேண்டும் என்று கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த பிரச்சனையில், தமிழக அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி முன்னிலையில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது முறையாக ஜவுளி உற்பத்தியாளர்கள், தறி உரிமையாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கொண்ட முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஆனால், அந்தக் கூட்டத்திலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மறு தேதி குறிப்பிடப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அண்ணா தொழிர் சங்கம் சார்பில் சோமனூர், மற்றும் பல்லடத்தில் கஞ்சித் தொட்டி திறந்து மக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது மேலும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications