திமுக-காங்.கை தோற்கடிக்க புதிய கூட்டணி: சுவாமி

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காஷ்மீரில் சிலர் இந்தியாவிடமிருந்து விடுதலை வேண்டும் என்று கோருவது கண்டனத்துக்குரியது. இந்திய அரசியல் சட்டத்தின்படி காஷ்மீருக்கு விடுதலை அளிக்க முடியாது. வேண்டுமானால் காஷ்மீருக்கு விடுதலை கோருபவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க முடியும்.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு இந்த நிலையிலாவது கைவிட வேண்டும். இந்தியாவை அணு ஆயுத நாடாக அமெரிக்கா அங்கீகரிக்காததால் இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்காக வலுவான கூட்டணி ஒன்றை அமைக்கும் ரகசிய முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இந்த அணியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும்.
வரும் 29ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நளினியின் விடுதலை கோரும் மனு மீதான வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
இதில் நான் நேரில் ஆஜராகி நளினி விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடுவேன் என்றார்.
பேட்டியின்போது ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரலேகா உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications