கிர்கிஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி 70 பேர் பலி

முன்னாள் சோவியத் குடியரசு நாடான கிர்கி்ஸ்தான் தலைநகர் பிஷேக் அருகே உள்ள மனாஸ் விமான நிலையத்தில் இருந்து ஈரான் நாட்டின் மஷாத் நகருக்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது.
போயிங்-737 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை விமானிகள் மனாஸ் விமான நிலையத்துக்கு திரப்பினர்.
ஆனால், விமான நிலையத்துக்கு 2 கி.மீ. தூரத்தில் வந்து கொண்டிருந்தபோதே அந்த விமானத்தில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானத்தில் இருந்த 70 பேர் பலியாயினர். விமானி உள்பட சுமார் 20 பேர் உயிர் தப்பிவிட்டனர்.
கிர்கிஸ்தானின் இடேக் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தை ஈரானின் ஏஸ்மேன் ஏர்லைன்ஸ் இயக்கி வந்தது. இடேக் ஏர் நிறுவனம் பழுதடைந்த விமானங்களை இயக்குவதில் பேர் போனது. இதனால் இந்த நிறுவன விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications