ஆக்கிரமிப்பு அகற்றம்-தீக்குளிக்க முயன்றவர் கைது

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்றுவதை கண்டித்து தீக்குளிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், தோகமலை அருகே உள்ள பாதிரிப்பட்டியில் புறம்போக்கு நிலங்களில் பலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தாசில்தார் உள்பட அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

அப்போது, புறம்போக்கு நிலத்தில் மளிகை கடை நடத்தி வரும் ரங்கநாதன் என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்ட ரங்கநாதன், தனது கடையை இடித்தால் தீக்குளிப்பேன் என்று கூறி மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஆக்கிரப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீக்குளிக்கப் போவதாக அதிகாரிகளை மிரட்டிய ரங்கநாதனை கைது செய்தனர். இதையடுத்து அங்கு ஆக்ரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+