மருத்துவமனையில் இருந்து வெறிநாய்கடி நோயாளி எஸ்கேப்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளி தப்பியோடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், மணல்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரை கடந்த சில தினங்களுக்கு முன் வெறி நாய் ஒன்று கடித்துவிட்டது. பரிசோதனையில் அவருக்கு ரேபிஸ் நோய் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நோயின் தாக்கம் அதிகமானதால் அவரை சங்கிலியால் கட்டி, தனி செல்லில் வைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் செல்வம் திடீரென அந்த செல்லில் இருந்து தப்பியது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸார் செல்வத்தை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications