சென்னையில் 50 ஏக்கரில் மெகா கிரிக்கெட் ஸ்டேடியம்
சென்னை: சென்னை அருகே உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாகவுள்ளது. இந்த ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டால், மெல்போரன், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் ஸ்டேடியங்கள் சின்ன ஸ்டேடியங்களாகி விடும்.
2011ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. அப்போது சென்னைக்கு புதிய பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்தை நிர்மானிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக சென்னையிலிருந்து 25 கி.மீட்டர் தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கருங்குழிப்பள்ளம் என்ற இடத்தில் 50 ஏக்கர் இடம் வாங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய, அதி நவீன வசதிகளுடன் கூடிய ஸ்டேடியமாக இதை உருவாக்கப் போகிறார்கள். தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னர் ஸ்டேடியத்திற்குப் பெயர் சூட்டப்படவுள்ளது.
அளவிலும், சீட் வகையிலும், இந்த ஸ்டேடியம்தான் உலகிலேயே மிகப் பெரிதாக இருக்கும் வகையில் இது கட்டப்படவுள்ளது. விரைவில் இதற்கான காண்டிராக்டரை இறுதிசெய்யவுள்ளது கிரிக்கெட் சங்கம்.
இந்த ஸ்டேடியத்தின் முக்கிய அம்சமாக மழை பெய்யும்போது ஸ்டேடியத்தை மூடும் வகையிலான மேற் கூரையும் பொருத்தப்படவுள்ளது. இதனால் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போது மழை வந்தாலும் ஆட்டம் நிற்காமல் தொடர்ந்து அதிரடியாக நடந்து கொண்டிருக்கும்.
இதுகுறித்து கிரிக்கெட் சங்கத் தலைவர் என்.சீனிவாசன் கூறுகையில், உலகத் தரத்துடன் கூடியதாக இந்த ஸ்டேடியம் இருக்கும். ஸ்டேடியம் அமையவுள்ள இடத்தை 30 ஆண்டு குத்தகைக்கு அரசு வழங்குகிறது. இதற்காக ரூ. 1 லட்சம் கட்டணத்தை நாங்கள் கட்டியுள்ளோம்.
ஸ்டேடியம் தொடர்பான பணிகளை இறுதி செய்ய சங்கத்தின் செயற்குழு வியாழக்கிழமை கூடி திட்டமிடவுள்ளது.
ஸ்டேடிய வளாகம் 30 ஏக்கரில் அமையும். ஈடன் கார்டன் மற்றும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானங்களில் இருப்பதை விட கூடுதலான ரசிகர்கள் இங்கு அமர முடியும் என்றார் அவர்.
தற்போது மெல்போரன் மைதானம் தான்மிகப் பெரியது. அதில் 1 லட்சம் பேர் அமர முடியும். ஈடன் கார்டன் மைதானத்தில் 90 ஆயிரம் பேரை 'அடைக்கலாம்' என்பது குறிப்பிடத்தக்கது.
-
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம்












Click it and Unblock the Notifications