செப்-11: மதுரையில் மதிமுக மண்டல மாநாடு
பரமக்குடி: செப்டம்பர் 11ம் தேதி மதிமுக மண்டல மாநாடு மதுரையில் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பரக்குடியில் நடைபெற்றது. அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சிகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வரும் நடாளுமன்றத் தேர்தலில் மதிமுக, அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி.
திமுக கூட்டணியில் இருந்து பாமக விலகிவிட்டது. ஆனால், தற்போது திமுக தலைவர் கருணாநிதி, கூட்டணியில் பாமக இருந்தால் நன்றாக இருக்கும். கூட்டணி வலுவடையும் என்று கெஞ்சுகிறார்.
மதுரையில் செப்டம்பர் 11ம் தேதி மதிமுக மண்டல மாநாடு நடைபெறும். இந்த மண்டல மாநாடு மூலம் தமிழ்நாடு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications