விழாவில் தூங்கிய அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி
கோவை: கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு விழாவில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தூங்கி விழுந்தார்.
கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது மேடையில் இருந்து அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும், திருப்பூர் மேயர் செல்வராஜூம் தூங்கி தூங்கி விழுந்தனர். விழிக்க முயன்றும் முடியாமல் தூங்கி வழிந்தனர்.
இது குறித்து கட்சியினர் கூறுகையில், தளபதி (ஸ்டாலின்) வருகையால் இரவு பகலாக அமைச்சர் பழனிச்சாமியும், மேயர் செல்வராஜூம் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர். அதனால்தான் சோர்வு தாங்கமால் தூங்கிவிட்டனர் என்றனர் பாவமாக.












Click it and Unblock the Notifications