'ஒரிஸ்ஸா': போப் கண்டனம்-பாஜக 'நோ கமெண்ட்ஸ்'
டெல்லி: ஒரிஸ்ஸாவல் கிருஸ்துவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்கதலுக்கு போப்பாண்டவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், போப்பின் இந்த கண்டனம் குறித்து கருத்து கூற பாஜக மறுத்துவிட்டது.
ஒரிஸ்ஸாவில் பழங்குடியினர் அதிகம் வாழும் கந்தமால் மாவட்டத்தில் ஆசிரம் நடத்தி வந்த சுவாமி லட்சுமணானந்தா சரஸ்வதி, சில நாட்களுக்கு முன் நக்ஸலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிருஸ்துவ மதத்துக்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதத்தை தழுவச் செய்யும் பணிகளில் இவர் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது கொலையை அடுத்து ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் சர்ச்சுகள் மீது விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள், பாஜகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு போப்பாண்டவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த கண்டனம் குறித்து கருத்து கூற பாஜக மறுத்துள்ளது. போப்பாண்டவரின் கருத்து இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்திடம் நிருபர்கள் கேட்டபோது,
இந்த கலவரத்தை பாஜக கண்டிக்கிறது. லட்சுமணானந்தாவை கொலை செய்த கொலையாளிகளை உடனே கைது செய்யும்படி முதல்வர் நிதிஷ்குமாரை கேட்டுக் கொண்டுள்ளோம்.
4 மாதத்திற்கு முன் இந்து மடங்களின் தலைவர்கள் கிருஸ்தவர்களால் தாக்கப்பட்டபோது, யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications