For Daily Alerts
Just In
தலாய்லாமா மருத்துவமனையில் அனுமதி
மும்பை: திபெத் புத்தமதத் தலைவர் தலாய்லாமா மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
73 வயதான தலாய் லாமா தொடர்ந்து பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். பிரான்சிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா திரும்பிய அவர் மிகவும் களைப்புடன் காணப்பட்டார்.
மயக்க நிலை ஏற்பட்டதையடுத்து அவர் மும்பையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தனது மெக்ஸிகோ, டொமினிக்கல் குடியரசு நாடுகளின் பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.
1959ம் ஆண்டு சீனாவால் திபெத் ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து இந்தியாவுக்கு தப்பி வந்த தலாய் லாலா தர்மஸ்தலாவில் தலைமையகம் அமைத்து அங்கு தான் தங்கியிருந்து திபெத் விடுதலை போராட்டத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, August 29, 2008, 10:54 [IST]