8 ரயில் பயணிகள் பழுது பார்க்கும் மெஷின் மோதி பலி
Subscribe to Oneindia Tamil
புலந்த்சாகர் (உ.பி.): ரயிலின் படியில் நின்று பயணம் செய்து கொண்டிருந்த 8 பயணிகள், ரயில் பாதையில் நின்று கொண்டிருந்த பழுதுபார்க்கும் மெஷினில், மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கான்பூரிலிருந்து டெல்லிக்கு லாச்வி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சிக்கந்தர்பூர் ரயில்வே நிலையம் அருகே ஒரு ரயில் பாதையில், ரயில் தண்டவாளத்தை பழுது பார்க்கும் மெஷின் நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த பாதையை, லாச்வி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்தபோது, அந்த ரயிலின் வாசலில் நின்று கொண்டிருந்த பயணிகள் மெஷின் மீது மோதி தூக்கி வீசப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ெதரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் கிழக்கு உ.பி., பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications