சுகவீனம்: ஏ.பி.பரதன், அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏ.பி.பரதன் இன்று காலை திடீரென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உடல் நலம் பாதிக்கபப்ட்டிருப்பதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அச்சுதானந்தனுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு:
அதேபோல கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications