நோயாளியின் பித்தப் பையிலிருந்து 510 கற்கள் அகற்றம்
Subscribe to Oneindia Tamil
கோஹிமா: நாகாலாந்தில் உள்ள மருத்துவமனையில் நோயாளியின் பித்தப் பையிலிருந்து 510 கற்கள் எடுக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் இத்தனை கற்கள் பித்தப்பையில் இருந்து எடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
நாகாலாந்து மாநிலம் திமாப்பூர் அரசு மருத்துவமனையில் நம்மகிபோ ஜெலியாங் என்பவர் ஒருவர் வயிற்று வலி காரணமாக சேர்க்கப்பட்டார். சோதனையில் அவருக்கு பித்தப் பையில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு கடந்த 28ம் தேதி அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவரது பித்தப் பையில் இருந்து 510 கற்கள் அகற்றப்பட்டன. மிக அதிகளவிலான கற்கள் அகற்றப்பட்டது உலகிலேயே இதுவே முதல் முறையாகும்.
நோயாளி தற்போது சுகமடைந்துள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications