சிங்கூர் போராட்டம் துரதிர்ஷ்டவசமானது: நாராயணமூர்த்தி
பெங்களூர்: சிங்கூரில் டாடா மோட்டார்ஸின் நானோ தொழிற்சாலைக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் நாட்டுக்கும், மேற்கு வங்க மாநிலத்திற்கும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று இன்போஸிஸ் நிறுவன தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் மனதில் இது பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்த வகை செய்து விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கூரில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அது மேற்கு வங்கத்திற்கும், இந்தியாவுக்கும், முன்னேற்றத்ைத விரும்பும் அனைத்து இந்தியர்களுக்கும் துரதிர்ஷ்டவசமானது.
இது முதலீட்டாளர்கள் மனதில்,பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி விடும். அது இந்திய முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி, நிலையற்ற மன நிலையை அவர்களுக்கு அது ஏற்படுத்தி விடும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக மாறி விடும். கடந்த பத்து ஆண்டுகளில் நாம் சாதித்த ஜிடிபி வளர்ச்சிக்கு இது ஊறாக அமையும்.
மேலும் மேற்கு வங்கத்தைச் ேசர்ந்த ஏராளமான வேலையற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் இது பெருத்த பின்னடைவாக அமையும்.
எனவே இந்த பிரச்சினையை சுமூகமான முறையிலும், யாருக்கும் பாதகம் இல்லாத வகையிலும் தீர்க்க, நல்லெண்ணம் கொண்ட இந்தியர்கள் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications