ஜெ. மீதான தேர்தல் விதி மீறல் வழக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

பரங்கிப்பேட்டை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு வரும் செப்டம்பர் 29 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் புவனகிரி உள்பட நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என திமுக எம்பி குப்புசாமி ஜெயலலிதா மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டடது.

இதனால் தேர்தல் அதிகாரியாக இருந்த செல்வமணி, ஜெயலலிதா மீது பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றார் ஜெயலலிதா.

இந்நிலையில் இந்த வழக்கு பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+