குமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு பகலாக மழை பெய்ந்து வருகிறது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் நேற்று முதல் மழை தீவிரமடைந்துள்ளது. நாகர்கோவில், பூதபாண்டி, மயிலாடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. மழையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் குழித்துறை, தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பழையாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இடியுடன் பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காணப்பட்ட வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து, மாவட்டத்தில் குளுகுளு நிலை நிலவுகிறது.

நாகர்கோவிலில் பெய்த பலத்த மழையின் காரணமாக புத்தேரி பாறையடி பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இரவு பகலாக மழை கொட்டித் தீர்ப்பதால் மக்கள் பாதித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+