திருவாரூரில் நாப்தா கடத்திய 6 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் அருகே நாப்தா கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் அருகே மணக்காலி பகுதியில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு டேங்கர் லாரியில் இருந்து சிலர் ஏதோ இறக்கிக் கொண்டிரந்தனர். சந்தேகமடைந்த போலீஸார் லாரி டிரைவரை அழைத்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது அதில் 11,000 லிட்டர் நாப்தா என்ற எரிபொருள் இருந்தது தெரியவந்தது. அனுமதிபெறாமல் நாப்தா கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து லாரி டிரைவர் முருகேசன், கரூர் ராமாகவுண்டனூர் சரவணன், பொன்னுசாமி, வில்லியூர் முருகேசன், சேகர், கனகசபாபதி, தனபால் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications