வைத்திலிங்கம் மீண்டும் டெல்லி பயணம்
புதுச்சேரி: தன்னுடன் பதவியேற்கும் அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான இலாகாக்கள் குறித்து கட்சி மேலிடத்துடன் பேசி முடிவு செய்ய புதுச்சேரி புதிய முதல்வராக பதவியேற்க உள்ள வைத்திலிங்கம் இன்று மீண்டும் டெல்லி சென்றார்.
அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியதால் பதவியை இழந்தார் முதல்வர் ரங்கசாமி. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக முன்னாள் முதல்வர் வி.வைத்திலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது தலைமையிலான புதிய அமைச்சரவை 3ம் தேதி பதவியேற்கவுள்ளது.
இந் நிலையில் அமைச்சரவையில் யார், யாருக்கும் இடமளிப்பது, அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய இலாகாக்கள் ஆகியவை குறித்து விவாசதிக்க கடந்த 29ம் தேதி அவர் டெல்லி சென்றார்.
ஆனால், அப்போது இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இதையடுத்து இன்று காலை மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். கட்சித் தலைவர் சோனியா மற்றும் கட்சியின் புதுச்சேரி மாநில பொறுப்பாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ரங்கசாமி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த வல்சராஜ், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி ஆகியோருக்கு மீண்டும் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும் ரங்கசாமியின் உறவினராக இருந்தும் அவரை ஆதரிக்க மறுத்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்துக்கும் அமைச்சரவையில் இடம் தர வைத்திலிங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications