சோனியா தலைமையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி: தங்கபாலு
ஈரோடு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையை ஏற்கும், எந்த மதச்சார்பற்ற கட்சியுடனும் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.
ஈரோடு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி நடக்கிறதா என்று என்னிடம் கேட்டால், கட்சி உத்தரவுப்படி நான் செயல்படுவேன் என்பதே எனது பதில்.
சோனியாவின் தலைமையை ஏற்க வேண்டும், மதச்சார்பற்ற தன்மையுடன் திகழ வேண்டும். இப்படிப்பட்ட கட்சியுடன்தான் காங்கிரஸ் கூட்டணி வைக்கும்.
விஜயகாந்த் எனது நல்ல நண்பர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஆதரவாளர். தேமுதிகவுடன் உறவு குறித்து என்னால் எதுவும் கூற முடியாது.
ஒரிசாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகள் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற வன்முறைச் செயல்களை மத்திய அரசு பொறுத்துக் கொள்ளாது.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்ைத தடுத்து நிறுத்துவோம் என்று கூறும் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவின் எண்ணம் பலிக்காது. நிச்சயம் அத்திட்டம் நிறைவேறும் என்றார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications