கஸ்டவ் சூறாவளி நெருங்குகிறது-அமெரிக்காவில் உஷார் நிலை

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நியூ ஆர்லியான்ஸ் நகரைத்தான் காட்ரீனா சூறாவளி உலுக்கி எடுத்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் புதிதாக உருவாகியுள்ள கஸ்டவ் சூறாவளியால் மீண்டும் நியூ ஆர்லியான்ஸுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சூறாவளி என கஸ்டவை, நியூ ஆர்லியான்ஸ் நகர மேயர் ரே நர்கின் வர்ணித்துள்ளார். சூறாவளி நெருங்கி வருவதைத் தொடர்ந்து நியூ ஆர்லியான்ஸ் நகர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
ஏற்கனவே கியூபா, ஜமைக்காவை புரட்டிப் போட்ட இந்த சூறாவளிக்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே காட்ரீனா பாதிப்பை சந்தித்துள்ள நியூ ஆர்லியான்ஸ் மக்கள் கஸ்டவ் சூறாவளியால் என்ன பாதிப்பு ஏற்படப் போகிறதோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
2005ம் ஆண்டு நியூ ஆர்லியான்ஸை காட்ரீனா தாக்கியதில் 85 சதவீத நகரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. 1500 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது நியூ ஆர்லியான்ஸ் நகர் முழுவதும் காஸ், பெட்ரோல் சப்ளை முற்றிலும் தீர்ந்து போய் விட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர், வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அலபாமா முதல் டெக்ஸாஸ் வரை கஸ்டவ் சூறாவளி தாக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக மின்னசோட்டாவின் செயின்ட் பால் நகரில் இன்று தொடங்கவிருந்த குடியரசுக் கட்சி தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications