வளைகுடா நாடுகளில் ரம்ஜான் நோன்பு துவங்கியது
துபாய்: துபாய் உள்ளிட்ட வளைகுடாவின் அனைத்துப் பகுதிகளிலும் திங்கட்கிழமை முதல் ரமலான் மாத நோன்பு துவங்கியுள்ளது. இதனையொட்டி தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை தினமும் இரவு நடத்தப்படுகிறது.
ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித வேதமாம் திருக்குர்ஆன் அருளப்பெற்ற சிறப்புக்குரியது. நோயாளியாகவோ, பிரயாணியாக இருந்தால் இந்நோன்பில் இருந்து சலுகை அளிக்கப்படுகிறது. எனினும் விட்டுப்போன நோன்பை பிறிதொரு நாளில் நோற்கவேண்டும்.
துபாயில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) அமைப்பு தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தமிழக அருஞ்சுவையுடன் கூடிய நோன்புக் கஞ்சியினைத் தயாரித்து வழங்கி வருகிறது.
இதனை இந்தியர் மட்டுமல்லாது அரபியரும், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் மிகவும் ஆர்வமுடன் அருந்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இன்று முதல்..
இந்தியாவில் இன்றிரவு முதல் ரம்ஜான் நோன்பு துவங்கவுள்ளது.












Click it and Unblock the Notifications