சென்னையில் ரிலையன்ஸின் பிரமாண்ட காலணி ஸ்டோர்!
சென்னை: இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், காலணிகளுக்கு என்று தனி ஸ்டோரை சுமார் 6,000 சதுர அடிபரப்பளவில் சென்னையில் ஆரம்பித்துள்ளது.
சில்லறை மார்க்கெட்டிங் துறையில் கிடுகிடு வளர்ச்சியைக் கண்டுள்ள இந்நிறுவனம், ஏற்கெனவே டெல்லி, மும்பை, பெங்களூரு, மங்களூர், ஹைதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் காலணி கடைகள் சிறப்பாக நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் இப்போதுதான் முதன்முதலாக ரிலையன்ஸ் காலணி கடையைத் திறந்துள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்பாக்கம் மெயின் ரோட்டில் 'ரிலையன்ஸ் ஃபுட் பிரிண்ட்' என்ற பேரில் இந்தக் கடை தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு காலணிகள் கைப் பைகள், பெல்ட்டுகள் என்று 20,000 மேலான பொருட்கள் உள்ளன. 50க்கும் மேலான பிராண்டுகளில் காலணிகள் விற்பனைக்கு உள்ளன.
இந்தியத் தயாரிப்புகள் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலணிகளும் விற்கப்படுகின்றன.
ஆண்களுக்கு பக்காரு, பிராங்கோ, லி ஒன், ரெப்டேப், பிளார்ஷிம் மற்றும் பெண்களுக்கு கிட்டன்ஸ், லில்லிபுட், கிராஸ் ஜி அண்ட்டி ஆகியவையும் ரிலையன்ஸின் சொந்தத் தயாரிப்பான மாண்சினி, டொஸ்கோ, லிலியனாவும் கிடைக்கும்.
ரூ.300 முதல் ரூ.5,000 வரை போகிறது, காலணிகளின் விலை. கடை திறப்பு விழா சலுகையாக ரூபாய் ஆயிரத்துக்கும் அதிகமான காலணிகள் வாங்கினால் 15% சிறப்புத் தள்ளுபடியும் உண்டு.
விளையாட்டு வீரர்களுக்கான எந்த்யாசிஸ்ட், பள்ளிக் குழந்தைகளுக்கான பிட்டர் பேட்டர், வீட்டில் பயன்படுத்தும் ப்ரிஸ் பீ காலணி வகைகளும் விற்பனையில் உள்ளன.
சென்னையில் மேலும் முக்கியமான இடங்களில் ரிலையன்ஸ் காலணி கடைகள் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் இதுபோன்ற கடைகள் தொடங்கப்படுமாம்.











Click it and Unblock the Notifications