'அரவாணி' நிலையில் கம்யூ. கட்சிகள்-எம்பி புலம்பல்!
தென்காசி: ஆளும் கட்சியாகவும் இல்லாமல், எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரவாணி போல உள்ளனர் என்று தென்காசி எம்.பி. அப்பாத்துரை கூறியுள்ளார்.
தென்காசி அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் செலவில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரத்த சேமிப்பு வங்கி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
எம்.பி. அப்பாத்துரை தலைமை வகித்து, ரத்த சேமிப்பு வங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், தென்காசி அரசு மருத்துவமனையில் மொத்தம் 14 மருத்துவர்கள்தான் உள்ளனர். அவர்களில் பலர் விடுமுறையில் சென்று விடுகின்றனர்.
எஞ்சிய மருத்துவர்களை வைத்து தான் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் 2000க்கும் மேற்பட்ட புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஒரு பிளம்பரோ, எலக்ட்ரீஷியனோ கிடையாது. சுகாதார துறை அமைச்சராக இருந்த சாத்தூர் ராமசந்திரனிடம் இது பற்றி எடுத்துக் கூறினேன். அவரிடம் சண்டையும் போட்டேன். விளைவு மருத்துவமனையில் பணியாற்றிய எனது டாக்டர் நண்பரை சஸ்பெண்ட் செய்து விட்டனர். அதன் பிறகு அவர் மனம் வெறுத்து வேலையை விட்டே நின்றுவிட்டார்.
விரைவில் தென்காசி மாவட்டம் தலைநகரமாக மாறும். இங்கு மருத்துவ கல்லூரி அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு தேவையான இடமும் தென்காசியில் உள்ளது. ஐந்து ஆண்டுகாலம் எம்பியாக இருந்திருக்கிறேன்.
அரசுகளிடம் குறைகளை எடுத்து சொல்லி எந்த முன்னேற்றமும் இல்லை. இப்போது ஆளும் கட்சியாகவும், இல்லாமல் எதிர்கட்சியாகவும் இல்லாமல் அரவாணியை போல இருக்கின்றோம். வளர்ச்சி பணிகளை செய்து தாருங்கள் என கேட்கதான் முடியும். செய்து கொடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications