கஞ்சா கடத்தல்காரரை பிச்சைக்காரர் சட்டத்தில் கைது செய்த எஸ்.ஐ
சென்னை: கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டவர் மீது வழக்கு தொடராமல் சாதகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான சப் இன்ஸ்பெக்டர் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
சென்னை, ஆவடி கோயில் பதாகையை அடுத்த கன்னட பாளையத்தைச் சேர்ந்தவர் சிவா (49). கடந்த 18ம் தேதி ஆவடி பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
ஆனால், ஆவடி சப் இன்ஸ்பெக்டர் நாகதேவன் இவர் மீது கஞ்சா தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் பிச்சைக்காரர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லத்தில் சிவா சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட்டுக்கு தகவல் போனது. இதையடுத்து நேரடியாக காவல் நிலையம் வந்த ஆணையர் ஜாங்கிட் விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து கஞ்சா வழக்கில் போட வேண்டியவரை, பிச்சைக்காரர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து அவருக்கு சாதகமாக நடந்து கொண்டதற்காக நாகதேவனை ஆணையர் அலுவலத்திற்கு மாற்றி அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications