டீசலுக்கு இரட்டை விலை: பரிசீலிப்பதாக தியோரா தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டீசலுக்கு இரட்டை விலை நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவிததுள்ளார்.
இதன்படி தொழில் பயன்பாட்டுக்கான டீசலுக்கு ஒரு விலையும், பிற பயன்பாட்டுக்கான டீசலுக்கு தனி விலையும் நிர்ணயிக்கப்படும். லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்த விலையில் டீசல் தரப்படும்.
இதுகுறித்து முரளி தியோரா கூறுகையில், இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது மிகவும் கடினமான நிலை நிலவுகிறது. டீசல் விற்பனையால் ஏற்படும் நஷ்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி விடும். எனவே இரட்டை விலை நிர்ணயிப்பது குறித்து தீவரமாக பரிசீலிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications