திருவண்ணாமலை: குன்றுகளை பசுமையாக்க ரூ.5 கோடி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலைகளை பசுமையாக்க ரூ.5 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6,000 மரக்கன்று நடும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகளை நட்டு, திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலைகள், குன்றுகளில் பசுமை வளையம் என்ற திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
அதில் தேனிமலை குன்றில் தனியார் நிறுவனமும், அருணை பொறியியல் கல்லூரி மாணவர்களைக் கொண்டு மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கட்டட மையம், வேளாண்மைத் துறை, வனத்துறை ஆகியவைகள் இணைந்து செயல்படுத்தி உள்ளன.
இந்த குன்றில் 14 வகையான மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. நாவல், புங்கன், துரிஞ்சை, வெப்பாளை, இலுப்பை, நெல்லி, தாண்டிரி, வேம்பு, நீர்மத்தி, சிசு, ஆலம், அரசன், அவுஞ்சி, பாதாம், வெளாண் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மூன்று கட்டங்களாக நிதியை பெற்று மலைகளில் மரங்களை வளர்க்க உள்ளோம். விரைவில் அந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள மலைகளை பசுமையாக்க ரூ.5 கோடி நிதி கோரி மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி பரிந்துரை செய்துள்ளார் என்றார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications