என்.எஸ்.ஜி. ஒப்புதல்: பிரதமருக்கு பாஜக, இடதுசாரிகள் கண்டனம்
டெல்லி: என்.எஸ்.ஜி சலுகை மூலம், இனிமேல் எப்போதுமே அணு குண்டு சோதனை நடத்த முடியாத அளவுக்கு இந்தியா தனது உரிமையை இழந்து விட்டது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது. இதேபோல இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டார் பிரதமர் என்று இடதுசாரிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
என்.எஸ்.ஜி. சலுகை ஒப்புதல் குறித்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக துணைத் தலைவருமான யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவிக்கையில், என்.எஸ்.ஜி. ஒப்புதல் குறித்த விரிவான விவரங்களைப் பார்த்த பின்னர் பாஜக தனது முழுமையான கருத்ைத வெளியிடும்.
இருப்பினும், புஷ் நிர்வாகம், அந்நாட்டு நாடாளுமன்ற வெளி விவகராகக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதம் மூலம், அணு குண்டு சோதனை நடத்தும் உரிமையை இந்தியா முழுமையாக இழந்து விட்டதை தெளிவாக்கி விட்டது.
இந்தியா மிகப் பெரிய மார்க்கெட், அதன் பலன்களை நாம் அனுபவிக்கலாம் என்ற காரணத்தால்தான் இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
இந்த விஷயத்தில் ரஷ்யா, பிரான்ஸும் கூட தங்களது சுய லாபத்தையே அதிகம் கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளன.
அணு தீண்டாமை விலகி விட்டது என்று பேசுகிறார்கள். என்ன தீண்டாமை வந்து விட்டது நமக்கு. பல்வேறு தடைகள் நம் மீது திணிக்கப்பட்ட போதும் கூட வாஜ்பாய் அரசு பொக்ரானில் அணு குண்டு சோதனையை நடத்தியது. பல்வேறு அதி நவீன அணு தொழில்நுட்பங்கள் அதன் பிறகுதான் கிடைத்தது. எனவே இந்தியா அணு தீண்டாமைக்கு உட்பட்டு விட்டது என்று பேசுவது முட்டாள்தனமானது என்றார் அவர்.
தொடர்ந்து எதிர்ப்போம்: சிபிஐ
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கருத்து தெரிவிக்கையில், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்ைத தொடர்ந்து எதிர்ப்போம்.
என்.எஸ்.ஜி. ஒப்புதல் குறித்த முழு விவரமும் எங்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும் நமது நாடு தனது இறையாண்மையை இழந்து விட்டது என்று மட்டும் தெரிகிறது என்றார்.
இந்தியா சரணடைந்து ட்டது: எச்சூரி
சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறுகையில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டிருப்பது போல தெரிகிறது. மேலும் அணு ஆயுத சோதனையை நடத்த மாட்டோம் எனவும் இந்தியா உறுதியளித்துள்ளது. இது அமெரிக்காவிடம் முழுமையாக சரணடைந்து விட்டதாகத்தான் அர்த்தம் என்றார் எச்சூரி.
பிரதீபாவை சந்திக்க இடதுசாரிகள்- மாயாவதி முடிவு
இதற்கிடையே, புஷ் நிர்வாகம், அமெரிக்க நாடாளுமன்ற கமிட்டிக்கு எழுதிய கடித விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரை உடனடியாக கூட்ட உத்தரவிட வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து முறையிட இடதுசாரிகளும், பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.
செவ்வாய்க்கிழமை இக்கட்சிகளின் தலைவர்கள் பிரதீபா பாட்டீலை சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனு அளிக்கவுள்ளதாக சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி தெரிவித்தார்.
நேற்று நடந்த சிபிஎம் கட்சியின் 2 நாள் பொலிட்பீரோ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
-
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்!











Click it and Unblock the Notifications