200 மூட்டை ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கேரளாவிற்கு கடத்த இருந்த 200 மூட்டை ரேஷன் அரிசியை பழனி அருகே போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.25 லட்சம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கேரள பதிவு எண் கொண்ட லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடு்த்து எஸ்பி ஜெயஸ்ரீ உத்தரவின்படி டிஎஸ்பி சுந்தரேசன், இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் தலைமையிலான போலீஸார் ஒட்டன்சத்திரம்-பழனி இடையை வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக கேரள பதிவு எண் கொண்ட லாரி ஒன்று பழனி நோக்கி வேகமாக சென்றது. சந்தேகமடைந்த போலீஸார் லாரியை விரட்டிச் சென்று பச்சளநாயக்கன்ப்பட்டி அருகே மடக்கி நிறுத்தினர். லாரியை சோதனை செய்தபோது, அதில் 200 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.25 லட்சமாகும்.

லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து ரேஷன் அரிசி கொண்டு செல்லப்படுவதாக கூறினார். இதையடுத்து லாரி உரிமையாளர் சீனிவாசன், அரிசி உரிமையாளர் பாலமுருகன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். பாலமுருகனுக்காக ரேஷன் அரிசி கடத்தி சென்ற மற்றொரு லாரியை பொள்ளாச்சி அருகே போலீஸார் பிடித்துள்ளனர். பாலமுருகன், இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+