சிமி மீதான தடை அக். 2வது வாரம் வரை மீண்டும் நீட்டிப்பு
டெல்லி: சிமி அமைப்பு மீதான தடையை அக்டோபர் மாதம் 2வது வாரம் வரை மீண்டும் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய மாணவர் இயக்கமான சிமிக்கு 2010 வரை மத்திய அரசு விதித்த தடையை விலக்குவதாக டெல்லி சிறப்பு நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது.
இதையடுத்து தடையை விலக்கிய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
கடந்த மாதம் 25ம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம், இம்மாதம் 24ம் தேதி வரை தடையை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, சிமி மீதான தடையை அக்டோபர் மாதம் 2வது வாரம் வரை நீட்டித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் தொடர்ந்து தடை கோருவது தொடர்பாக உரிய காரணங்களையும் ஆவணங்களையும் சமர்பிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications