ஆண்டிபட்டியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் ஜெ.

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: வரும் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை வரும் 15ம் தேதி தனது சொந்த தொகுதியான ஆண்டிப்பட்டியில் தொடங்குகிறார் ஜெயலலிதா.

அதிமுகவின் பொது செயலாளராக 6வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வரும் 14ம் தேதி அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுக் கூட்டம் ஆகியவை நடக்கிறது. இது அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அப்படியும் எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற் கொள்ள இருக்கிறேன். அதை அண்ணா பிறந்த நாளான வரும் 15ம் தேதி அன்று எனது சொந்த தொகுதியான ஆண்டிப்பட்டியில் தொடங்குகிறேன்.

இடதுசாரிகள், பாமக கட்சிகளுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்படும். மீடியாவுக்கு தெரியாமல் எந்த ரகசியமும் காக்க முடியாது.

மாநில அளவிலும், தேசிய அளவிலும் அதிமுக்குவுக்கு முக்கியப் பங்கு இருக்கப் போகிறது.

திமுக கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் விலகியதை அடுத்து திமுக மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர அதிமுகவுக்கு அவசியம் ஏற்படவில்லை. ஏனென்றால் மக்களின் நம்பிக்கையை திமுக அரசு ஏற்கனவே இழந்துவிட்டது. தனது இறுதி நாட்களில் திமுக அரசு உள்ளது.

அணு ஒப்பந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே மத்திய அரசை அதிமுக எதிர்த்து வருகிறது. தொடர்ந்து எதிர்த்தும் வருகிறோம். என்எஸ்ஜி ஒப்புதல் என்பது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தியா விற்றுவிட்டது என்பதுதான் அர்த்தம்.

இனி நாம் அணுகுண்டு சோதனை நடத்த முடியாது என்பது தெளிவாக தெரிகிறது. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் இந்தியா தனது இறையாண்மையை இழந்துவிட்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+