12.1 சதவீகிதமாக குறைந்தது பணவீக்கம்!

செப்டம்பர் இறுதியில் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட பணவீக்கம், கடந்த இரு வாரங்களாக சட்டென்று குறையத் தொடங்கியிருக்கிறது. கடந்த வாரம் 12.34 புள்ளியாக இருந்தது, நேற்றைய கணக்கீட்டின்படி 12.1 ஆக குறைந்துள்ளது.
அதேநேரம் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பழங்கள், சர்க்கரை, எண்ணெய், அமிலப் பொருட்கள் போன்றவற்றின் விலைகள் இன்னும் உயர்ந்தபடிதான் உள்ளன. இவற்றின் விலை நிலை கடந்த வாரத்தை விட 0.3 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது.
அரிசி, கோதுமை, வெங்காயம் போன்ற சில பொருட்களின் விலைகள் குறையத் தொடங்கியிருப்பதும், மொத்த விலைக் குறியீட்டுக் கணக்கெடுப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள மேலும் 61 பொருட்களின் விலை நிலையில் எந்த விதமாற்றமும் இல்லாமலிருப்பதும்தான், இப்போது பணவீக்கத்தின் அளவு குறையக் காரணம், என நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இப்போதைக்கு எதையும் முழுமையாக நம்பிவிடத் தேவையில்லை. இது ஒரு குறுகிய காலப் போக்குதான். ஆனால் அடுத்த ஆண்டுக்குள் பணவீக்கம் மீண்டும் சாதாரண அளவான 5 அல்லது 6 சதவிகிதத்துக்குள் வந்துவிடும் என நம்புகிறோம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் வீரமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications